குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் பதவி இழப்பதை தடுக்கும் அவசரச் சட்டத்தை திரும்பப் பெற காங்., உயர் மட்டக்குழு விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இன்று காலையில் நடைபெற்ற காங்கிரஸ் உயர் மட்டக் குழு கூட்டத்தில், அவசர சட்டம் குறித்த சாதக பாதகங்கள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இவ்விகாரத்தில் இன்று மாலை நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோனியா தலைமியிலான காங்கிரஸ் உயர் மட்டக் குழு கூட்டம் 1 மணி நேரம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ஷிண்டே, அகமது படேல் அகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்குப் பின்னர், பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதி மாளிகை சென்று குடியரசு தலைவரை சந்தித்தார்.