ஜன 17-ல் ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தேர்தல் முடிவு: உச்ச நீதிமன்றம்

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தேர்தல் முடிவு வரும் 17-ஆம் தேதி அறிவிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 19-ம் தேதி உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடைபெற்றது. இதில் ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடி போட்டியிட்டார்.

லலித் மோடி ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்க தலைவராகக் கூடாது என்று உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மனு தாக்கல் செய்தது.

அதில், பிசிசிஐ ஆட்சேபம் தெரிவித்த பின்னரும் ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியம் மோடியின் வேட்புமனுவை ஏற்றுக் கொண்டது தவறானது. கிரிக்கெட் வாரியத்தின் நற்பெயரைக் கெடுக்கும்வகையில் மோடி நடந்து கொள்வார் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத் தேர்தல் முடிவு வரும் 17-ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும், தேர்தலில் லலித் மோடி வெற்றிபெற்றால் பிசிசிஐ மனுவை விசாரிப்பதாகவும் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE