கேரள முதல்வர் உம்மன் சாண்டி உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலை கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோத்தித மருத்துவர்கள், சாண்டிக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டிருந்ததாகவும் சிகிச்சைக்குப் பின்னர் தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவரை இன்று ஒரு நாள் முழுவதும் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து முதல்வரின் இன்றைய நிகழ்ச்சிகள் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன.