ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில்,பக்தர்களுக்கு டீ-யில் மயக்க மருந்து கலந்து கொடுத்து நகை, பணத்தை கொள்ளையடித்த பெண்ணை பக்தர்கள் கையும் களவுமாக பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
கோயில் வளாகத்தில் டீ கடை நடத்தி வரும் பெண் ஒருவர், சில பெண்களுக்கு டீ-யில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். மயங்கி விழுந்த பெண்களிடமிருந்த பணம், நகை போன்றவற்றை அபகரித்துள்ளார். இதுகுறித்து காளஹஸ்தி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அந்தப் பெண்ணை கைது செய்தனர்.