வக்பு போராட்டத்தால் வன்முறை: மேற்கு வங்கத்தில் பதற்றம் நீடிப்பு; கூடுதல் துணை ராணுவ படையினர் குவிப்பு

By செய்திப்பிரிவு

முர்ஷிதாபாத்: வக்பு சட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து நடை​பெற்ற போராட்​டம் வன்​முறை​யாக மாறிய​தால் மேற்கு வங்க மாநிலம் முர்​ஷி​தா​பாத்​தில் பதற்​ற​மான சூழல் நில​வு​கிறது. இதையடுத்​து, மேலும் 5 கம்​பெனி துணை ராணுவ படை​யினர் குவிக்​கப்​பட்​டுள்​ளனர்.

நாடாளு​மன்ற இரு அவை​களி​லும் நிறைவேற்​றப்​பட்ட வக்பு சட்ட திருத்த மசோ​தாவுக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு ஒப்​புதல் அளித்​தார். இதைத் தொடர்ந்​து, நாடு முழு​வதும் வக்பு சட்​டம் அமலுக்கு வந்​துள்​ளது. இதற்​கிடையே, வக்பு சட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து நாட்​டின் பல்​வேறு பகு​தி​களி​லும் முஸ்​லிம் அமைப்​பு​கள் போராட்​டம் நடத்தி வரு​கின்​றன.

மேற்கு வங்க மாநிலத்​தில் வக்பு சட்​டத்தை அமல்​படுத்த மாட்​டோம் என்று முதல்​வர் மம்தா பானர்ஜி கூறி​யிருந்த நிலை​யில், வக்பு சட்​டத்​துக்கு எதிர்ப்பு தெரி​வித்து அம்​மாநிலத்​தில் தீவிர​மாக போராட்​டம் நடத்​தப்​பட்டு வரு​கிறது. இந்த சூழலில், முர்​ஷி​தா​பாத் மாவட்​டத்​தில் நடந்த போராட்​டம் வன்​முறை​யாக மாறிய​தில் 3 பேர் உயி​ரிழந்​தனர். 150 பேர் கைது செய்​யப்​பட்​டனர். இதையடுத்​து, அங்கு மத்​திய படைகளை அனுப்​பு​மாறு கொல்​கத்தா உயர் ​நீ​தி​மன்​றம் கடந்த 12-ம் தேதி உத்​தர​விட்​டது.

வீரர்கள் மீது தாக்குதல்: இந்த நிலை​யில், அங்கு பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்ள எல்லை பாது​காப்பு படை​யினர் மீது போராட்​டக்​காரர்​கள் தாக்​குதல் நடத்​தினர். இதனால், பதற்​ற​மான சூழ்​நிலை உரு​வானதை அடுத்​து, கூடு​தலாக 5 கம்​பெனி எல்லை பாது​காப்பு படை வீரர்​கள் அங்கு அனுப்​பப்​பட்​டுள்​ளனர். இதுகுறித்து எல்லை பாது​காப்பு படை டிஐஜி நீலோத்​பல் குமார் பாண்டே கூறிய​தாவது: முர்​ஷி​தா​பாத்​தில் ஏற்​கெனவே 4 கம்​பெனி எல்லை பாது​காப்பு படை வீரர்​கள் உள்​ளனர். அங்கு பதற்​ற​மான சூழல் உரு​வான​தால், மேலும் 5 கம்​பெனி வீரர்​கள் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர். பதற்றமான பகு​தி​களுக்கு வீரர்​கள் அனுப்​பப்​படு​கின்​றனர்.

போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்​ளோர் தீவிர தாக்​குதல் நடத்​தி​ய​தால், கோஸ்​பரா பகு​தி​யில் கடந்த 12-ம் தேதி துப்​பாக்​கிச் சூடு நடத்த நேர்ந்​தது. எங்​களது வாக​னங்​கள் தீ வைத்து எரிக்​கப்​பட்​டன. சுதி, சம்​சர்​கஞ்ச் ஆகிய பகு​தி​களில் பதற்​றம் நீடிப்​ப​தால், அங்கு அதிக அளவில் வீரர்​கள்​ அனுப்​பப்​பட்​டுள்​ளனர்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

மேலும்