ஒரு கோடிக்கும் மேல் மரக்கன்றுகளை நட்டு சாதித்த ராமய்யா காலமானார்

By என்.மகேஷ்குமார்


ஹைதராபாத்: தெலங்​கானா மாநிலம், கம்​மம் மாவட்​டம் ரெட்​டிபல்லி கிராமத்தை சேர்ந்​தவர் ராமய்யா (87). விவ​சா​யி​யான ராமய்யா 50 வருடங்​களுக்​கும் மேலாக கம்​மம் உட்பட அதன் சுற்​றுப்​புற மாவட்​டங்​களில் உள்ள பள்​ளி, கல்​லூரி, பேருந்து நிலை​யங்​கள், விளை​யாட்டு மைதானங்​கள், அரசு அலு​வல​கங்​கள் என பல இடங்​களில் மரக்​கன்​றுகளை நடு​வதை வழக்​க​மாக கொண்​டிருந்​தார்.

இதனால் இவரை சிலர் கேலி​யும் செய்​ததுண்​டு. ஆனால், அவர் அதனை பொருட்​படுத்​து​வ​தில்​லை. இவர் தன் சட்டை மீதும், தலை​யிலும் “இயற்​கையை நாம் காப்​பாற்​றி​னால் இயற்கை நம்மை காப்​பாற்​றும்” எனும் வாசகத்தை ஒரு அட்​டை​யில் ஒட்டி செல்​வதை வழக்​க​மாக கொண்​டிருந்​தார். இவரது சேவையை அறிந்த மத்​திய அரசு, ராமய்​யா​வுக்கு கடந்த 2017-ல் பத்ம  விருது வழங்கி பாராட்​டியது.

இவருக்கு ‘வன ஜீவி’ என மக்​கள் பெயர் வைத்​துள்​ளனர். இந்​நிலை​யில், ராமய்யா 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்​டின் அருகே ஒரு மரக்​கன்றை நட்டு விட்டு இரவு அதன் அரு​கிலேயே படுத்து உறங்கி விட்​டார். நேற்று முன்தினம் காலை அவரை எழுப்​பிய அவரது வீட்​டார், அவர் அசை​யாமல் இருக்​கவே, அவரை மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்று மருத்​து​வரிடம் காண்​பித்​தனர்.

அப்​போது, ஏற்​கெனவே ராமய்யா மாரடைப்​பால் இறந்துவிட்​டார் என்​பதை மருத்​து​வர்உறு​திப்​படுத்​தி​னார். இதை யடுத்து ராமய்யா மறைவுக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்