சக மாணவர் மீது தாக்குதல்: ரூர்க்கி ஐஐடி மாணவர்கள் 5 பேர் மீது வழக்கு பதிவு

By செய்திப்பிரிவு

டேராடூன்: சக மாணவர் ஒருவரை கண்ணாடி பாட்டில்களால் தாக்கியதாக ஐஐடி ரூர்க்கியைச் சேர்ந்த 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலம் ரூர்க்கியிலுள்ள ஐஐடி-யில் படித்து வருபவர் அஜித்குமார் கேஷ்ரி(23). இவர் ஜார்க்கண்டை சேர்ந்தவர். இந்நிலையில் கடந்த 23-ம் தேதி அஜித் குமாரை, அதே ஐஐடி-யில் படிக்கும் 5 பேர் சேர்ந்து கண்ணாடி பாட்டிலால் தாக்கியுள்ளனர். முன்பகை காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இதுதொடர்பாக அஜித்குமார் கொடுத்த புகாரின் பேரில் 5 மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையும் (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினை என்றும், ஐஐடி-க்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றும் ரூர்க்கி ஐஐடி அதிகாரி நரேந்திர பந்த் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்