கர்நாடக ஹனி டிராப் விவகாரத்தை விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

By இரா.வினோத்


பெங்களூரு /புதுடெல்லி: கர்​நாட​கா​வில் எம்​எல்​ஏ.க்​களை குறி வைத்து ஹனி டிராப் செய்​வ‌​தாக எழுந்த புகாரை விசா​ரிக்க உச்ச நீதி​மன்​றம் மறுத்​து​விட்​டது.

கர்​நாடக சட்​டப்​பேர​வை​யில் கடந்த 21-ம் தேதி கூட்​டுறவுத் துறை அமைச்​சர் கே.என்​.​ராஜண்ணா பேசுகை​யில், ‘‘48 எம்​எல்​ஏ.க்​களை அரசி​யல் ரீதி​யாக ப‌ழி வாங்க பெண்​களை வைத்து பாலியல் புகாரில் சிக்க வைக்க சிலர் முயற்​சிக்​கின்​றனர். என்​னை​யும் ஹனி டிராப்​பில் சிக்க வைக்க‌ சதி செய்​த‌னர்” என குற்​றம் சாட்​டி​னார்.

இதுகுறித்து விசா​ரிக்க வலி​யுறுத்தி அமளி​யில் ஈடு​பட்ட பாஜக எம்​எல்​ஏ.க்​கள் அஸ்​வத் நாராயண், முனி ரத்​னா, உள்​ளிட்ட 18 பேர் அடுத்த 6 மாதங்​களுக்கு இடைநீக்​கம் செய்​யப்​பட்​டனர். இந்​நிலை​யில் டெல்​லியை சேர்ந்த சமூக ஆர்​வலர் பினய் குமார் சிங், “கர்​நாட​கா​வில் ஹனி டிராப் குறித்து சிபிஐ அல்​லது சிஐடி விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும்” என்று கோரி பொதுநல மனு தாக்​கல் செய்​தார்.

இந்த வழக்கு நீதிப​தி​கள் விக்​ரம் நாத், சஞ்​சய் கரோல் மற்​றும் சந்​தீப் மேத்தா ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நீதிபதி விக்​ரம் நாத் “கர்​நாட​கா​வில் உள்ள பிரச்​சினை​கள் குறித்து நீங்​கள் ஏன் கவலைப்​படு​கிறீர்​கள்? அந்த மாநில அரசு அந்த விவ​காரத்தை கையாள போது​மான அதி​காரத்தை கொண்​டுள்​ளது. எனவே இந்த பொதுநல மனுவை தள்​ளு​படி செய்​கிறோம்” என்​று உத்​தர​விட்​டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்