2026-ல் தமிழகத்தில் தே.ஜ. கூட்டணி ஆட்சி: இபிஎஸ் உடனான சந்திப்புக்குப் பிறகு அமித்ஷா நம்பிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: டெல்​லி சென்​ற அதி​முக பொதுச்​ செய​லா​ளர்​ பழனி​சாமி, மத்​தி​ய உள்​துறை அமைச்​சர்​ அமித்​ஷாவை நேற்​று சந்​தித்​துப்​ பேசி​னார்​. இதையடுத்​து, அமித்​ஷா தனது எக்​ஸ்​ வலை​தளத்​தில்​, 2026-ல்​ தமிழகத்​தில்​ தேசி​ய ஜனநாயக கூட்​ட​ணி ஆட்​சி அமை​யும்​ என்​று பதி​விட்​டுள்​ளார்​.

அதி​முக பொதுச்​ செய​லா​ளர்​ பழனி​சாமி நேற்​று சென்​னை​யில்​ இருந்​து வி​மானம்​ மூலம் டெல்​லி சென்​றார்​. கடந்​த மாதம் சென்​னை​யில்​ இருந்​து காணொலி வாயி​லாக டெல்​லி​யில்​ திறந்​து​வைத்​த அதி​முக அலு​வல​கத்​தை அவர்​ பார்​வை​யிட்​டார்​. அப்​போது, மாநிலங்​களவை உறுப்​பினர்​கள்​ சி.​வி.சண்​முகம்​, மு.தம்​பிதுரை ஆகியோர்​ உடனிருந்​தனர்​. சட்​டப்​பேர​வை கூட்​டத்​ தொடர்​ நடை​பெற்​று வரும்​ நிலை​யில்​, பழனி​சாமி டெல்​லி சென்​றிருப்​பது குறித்​து
நேற்​று பேர​வை​யில்​ பேசி​ய முதல்​வர்​ மு.க.ஸ்​டா​லின்​, `எதிர்க்​கட்​சி தலை​வர்​ யாரைச்​ சந்​திக்​க டெல்​லி சென்​றுள்​ளார்​ என்​ற செய்​தி வந்​துள்​ளது' என்​று தெரி​வித்​தது அரசி​யல்​ வட்​டாரத்​தில்​ பெரும்​ பரபரப்​பை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

பாஜக​வுடன்​ கூட்​ட​ணி இல்​லை என்​ப​தில்​ உறு​தி​யாக இருந்​த பழனி​சாமி, கடந்​த மக்​கள​வைத்​ தேர்​தலை பாஜக இல்​லாமல்​ சந்​தித்​தார்​. அந்​த தேர்​தலில்​ அதி​முக கூட்​ட​ணி அனைத்​து இடங்​களி​லும்​ தோல்​வி அடைந்​தது. ஆனால்​, தேர்​தலுக்​கு முன்​பே அதி​முக​வின்​ 2-ம்​ கட்​டத்​ தலை​வர்​கள்​ பாஜக​வுடன்​ கூட்​ட​ணி சேர தொடர்ந்​து விருப்​பம்​ தெரி​வித்​திருந்​தனர்​.

தேர்​தல்​ முடிவுக்​கு பின்​னர், `தேர்​தலில்​ பாஜக​வுடன்​ கூட்​ட​ணி வைத்​திருந்​தால்​, கணிச​மான இடங்​களைப்​ பெற்​று இருக்​கலாம்​' என்​று அவர்​கள்​ தெரி​வித்​
தனர்​. தமிழகத்​தில்​ சட்​டப்​பேர​வைத்​ தேர்​தல்​ அடுத்​த ஆண்​டு நடை​பெற உள்​ள​தால்​, வலு​வான கூட்​ட​ணி​யை அமைக்​க பழனி​சாமி திட்​ட​மிட்​டுள்​ளார்​.

பாஜக​வின்​ தேசி​ய மற்​றும்​ மாநிலத்​ தலை​மை​யும்​ அதி​முக​வுடன்​ கூட்​ட​ணி வைக்​க தீவிர முயற்​சிகளை மேற்​கொண்​டு வரு​கிறது. அதே​நேரம்​, அதி​முக​வின்​ 2-ம்​ கட்​டத்​ தலை​வர்​கள்​, பாஜக உள்​ளிட்​ட கட்​சிகளை இணைத்​து கூட்​ட​ணி அமைக்​கலாம்​ என்​று பழனி​சாமி​யிடம்​ தெரி​வித்​து வரு​கின்​றனர்​. அதனால்​ மீண்​டும்​ அதி​முக - பாஜக கூட்​ட​ணி உறு​தி​யாகி​விடும்​ என்​று கூறப்​படு​கிறது.

இதற்​கிடை​யில்​, நேற்​று சட்​டப்​பேர​வைக்​ கூட்​டத்​தொடர்​ முடிந்​ததும்​, அதி​முக முன்​னாள்​ அமைச்​சர்​கள்​ எஸ்​.பி.வேலுமணி, கே.பி.​முனு​சாமி ஆகியோர்​ சென்​னை​யில்​ இருந்​து வி​மானம்​ மூலம்​ டெல்​லி சென்​றனர்​.

இந்​நிலை​யில்​, நேற்​று இரவு திடீரென மத்​தி​ய உள்​துறை அமைச்​சர்​ அமித்​ஷாவை அவரது இல்​லத்​தில்​ அதி​முக பொதுச் செய​லா​ளர்​ பழனி​சாமி உள்ளிட்டோர் சந்​தித்​துப்​ பேசி​னர்.

அப்​போது, தமிழகத்​தின்​ அரசி​யல்​ நில​வரம்​, கூட்டணி மற்​றும் சட்​டம்​-ஒழுங்​கு பிரச்​சினை உள்​ளிட்​ட​வை தொடர்​பாக அவர்கள்​ பேசி​யிருக்​கலாம்​ என்​று தெரி​கிறது. இந்​த சந்​திப்​பைத்​ தொடர்ந்​து அமித்​ஷா தனது எக்​ஸ்​ வலை​தளத்​தில்​, ‘2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’ என்​று குறிப்​பிட்டுள்​ளார்​.

ஜி.கே.​வாசன்​ சந்​திப்​பு: முன்​ன​தாக, தமிழ்​ மாநில காங்​கிரஸ்​ கட்​சித்​ தலை​வர்​ ஜி.கே.​வாசன்​ நேற்​று ​காலை மத்​திய உள்​துறை அமைச்​சர்​ அமித்​ஷாவை ​நா​டாளு​மன்​ற அலு​வல​கத்​தில்​ மரி​யாதை நிமித்த​மாக சந்​தித்​துப்​ பேசியது குறிப்​பிடத்​தக்​கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்