“காஷ்மீரில் இருந்து பிரிவினைவாதம் தூக்கி வீசப்பட்டுள்ளது; பிரதமர் மோடிக்கு கிடைத்த வெற்றி” - அமித் ஷா பெருமிதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அனைத்து கட்சி ஹுரி​யத் மாநாடு கூட்​ட​ணி​யில் இருந்து 2 அமைப்​பு​கள் விலகி உள்​ளன. இது, பிரதமர் நரேந்​திர மோடிக்கு கிடைத்த மிகப்​பெரிய வெற்றி என்று மத்​திய அமைச்​சர் அமித் ஷா தெரி​வித்​துள்​ளார்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 1993-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி, ‘அனைத்து கட்சி ஹுரி​யத் மாநாடு’ என்ற கூட்​டணி உரு​வாக்​கப்​பட்​டது. இதில் பல்​வேறு அரசியல் கட்​சிகள், மத அமைப்​பு​கள், பிரி​வினை​வாத அமைப்​பு​கள் இணைந்​தன.

இந்த கூட்​டணி காஷ்மீர் முழு​வதும் தீவிர​வாத, பிரி​வினை​வாத அமைப்​பு​களை ஊக்​கு​வித்​தது. பாகிஸ்​தானின் பினாமி​யாக செயல்​பட்டு வந்​தது.

கடந்த 2016 முதல் 2018 வரை காஷ்மீரில் மக்​கள் ஜனநாயக கட்​சி, பாஜக கூட்​டணி ஆட்சி நடை​பெற்​றது. அப்​போது ஹுரி​யத் மாநாடு கூட்​ட​ணி​யின் பிரி​வினை​வாத தலை​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்க பாஜக திட்​ட​மிட்​டது.

அப்​போதைய முதல்​வரும் மக்​கள் ஜனநாயக கட்​சி​யின் தலை​வரு​மான மெகபூபா முப்​தி, பாஜக​வின் முயற்​சிகளை தடுத்​தார். இதன் காரண​மாக கூட்​டணி உடைந்​து, ஆட்சி கவிழ்ந்​தது.

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்​டில் 370-வது சட்​டப்​பிரிவை ரத்து செய்து காஷ்மீருக்​கான சிறப்பு அந்​தஸ்தை மத்​திய அரசு நீக்​கியது. அப்​போது ஹுரி​யத் மாநாடு கூட்​ட​ணி​யின் மூத்த தலை​வர்​கள் வீட்டு சிறை​யில் வைக்​கப்​பட்​டனர். தீவிர​வாத அமைப்​பு​கள் மீது மிகக் கடுமை​யான நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டன.

இதனிடையே, கடந்த ஆண்டு நடை​பெற்ற காஷ்மீர் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தேசிய மாநாடு கட்சி வெற்றி பெற்​று, அந்த கட்​சி​யின் மூத்த தலை​வர் உமர் அப்​துல்லா முதல்​வ​ராக பதவி​யேற்​றார்​. தற்​போது காஷ்மீரில் சட்​டம், ஒழுங்கை நிலை​நாட்ட ஹுரி​யத் மாநாடு தலை​வர் மிர்​வைஸ் உமர் பரூக் வீட்​டுக் காவலில் வைக்​கப்​பட்டுள்​ளார்.

இந்த சூழலில் ஹுரி​யத் மாநாடு கூட்​ட​ணி​யில் இருந்து ஜம்மு காஷ்மீர் மக்​கள் இயக்​கம் மற்​றும் ஜனநாயக அரசி​யல் இயக்​கம் ஆகிய இரு அமைப்​பு​கள் விலகி உள்​ளன. இதுகுறித்து மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா சமூக வலை​தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: பிரதமர் நரேந்​திர மோடி தலை​மையி​லான மத்​திய அரசின் கொள்​கைளால் ஜம்மு காஷ்மீரில் இருந்து பிரி​வினை​வாதம் தூக்கி வீசப்​பட்டு உள்​ளது. இரு அமைப்​பு​கள் ஹுரி​யத் உடனான உறவை முறித்து உள்​ளன.

இதை முழு​மனதுடன் வரவேற்​கிறேன். பாரதத்​தின் ஒற்றுமை ஓங்கி வளர்​கிறது. வளம், செழு​மை, அமை​தி, ஒன்​றிணைந்த பாரதத்தை கட்டி எழுப்​புவது பிரதமர் நரேந்​திர மோடி​யின் தொலைநோக்கு பார்வை ஆகும். தற்​போது அவருக்கு மிகப்​பெரிய வெற்றி கிடைத்​திருக்​கிறது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்