அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தும்போது பெண்கள், குழந்தைகளுக்கு கை விலங்கு போடவில்லை: மத்திய அரசு விளக்கம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த இந்​தி​யர்​களை அமெரிக்கா நாடு கடத்​தும்போது பெண்​கள், குழந்​தைகளின் கைகளில் விலங்கு போட​வில்லை என்று நாடாளு​மன்​றத்​தில் மத்​திய அரசு விளக்​கம் அளித்​துள்​ளது.

அமெரிக்க அதிப​ராக டொனால்டு ட்ரம்ப் பதவி​யேற்ற பிறகு பல்​வேறு அதிரடி நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறார். அதன்​படி அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருப்​பவர்​களை அவர​வர் நாட்​டுக்கு திருப்பி அனுப்பி வரு​கிறார். அதன்​படி முறை​யான ஆவணங்​கள் இன்றி தங்​கி​யிருந்த இந்​தி​யர்​களை​யும் அமெரிக்கா ராணுவ விமானத்​தில் திருப்பி அனுப்​பியது. அப்​போது இந்​திய பெண்​கள், குழந்​தைகள் உட்பட அனை​வரின் கை, கால்​களில் விலங்​கிட்டு நாடு கடத்​தி​ய​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதற்கு எதிர்க்​கட்​சி​யினர் கடும் கண்​டனம் தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில், நாடாளு​மன்​றத்​தில் இதுகுறித்து உறுப்​பினர்​கள் எழுப்​பிய கேள்வி​களுக்கு மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சகம் நேற்று எழுத்​துப்​பூர்​வ​மாக பதில் அளித்​தது. அதில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த பிப்​ர​வரி 5-ம் தேதி அமெரிக்​கா​வில் இருந்து நாடு கடத்​தப்​பட்டபோது இந்​தி​யர்​கள் பலர் தாய்​நாடு வந்​தனர். அவர்​களு​டைய கை, கால்​களில் விலங்​கிட்டு அழைத்து வந்​த​தாக புகார் எழுந்​தது. இதுகுறித்து அமெரிக்க அரசின் கவனத்​துக்கு மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சகம் உடனடி​யாக கொண்டு சென்று கண்​டனத்தை பதிவு செய்​தது. அதன்​பிறகு பிப்​ர​வரி 15 மற்​றும் 16-ம் தேதி​களில் அமெரிக்​கா​வில் இருந்து நாடு கடத்​தப்​பட்ட இந்​தி​யர்​கள் தாய்​நாடு வந்​தடைந்​தனர். அவர்​களுக்கு குறிப்​பாக பெண்​கள், குழந்​தைகளின் கை, கால்​களில் விலங்​கிட​வில்லை என்று அமெரிக்க அதி​காரி​கள் உறு​தி​யாக தெரி​வித்​தனர். இதை இந்​திய தூதரக அதி​காரி​கள் மற்​றும் நாடு கடத்​தப்​பட்டு இந்​தியா வந்​தடைந்​தவர்​களிடம் நேரடி​யாக விசா​ரணை நடத்தி உறுதி செய்​யப்​பட்​டது.

அமெரிக்​கா​வில் இருந்து நாடு கடத்​தும்போது பாது​காப்பு காரணங்​களுக்​காக கை, கால்​களில் விலங்​கிடு​வது கடந்த 2012-ம் ஆண்டு முதல் அமலில் உள்​ளது. அந்த விதி​முறை​களின்​படி​தான் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருப்​பவர்​களை நாடு கடத்​தும்​போது அமெரிக்க அரசு விலங்​கிட்டு அனுப்​பு​கிறது. எனினும், இந்​திய பெண்​கள், குழந்​தைகளின் கை, கால்​களில் விலங்​கிடப்​பட​வில்​லை. இவ்​வாறு மத்​திய வெளி​யுறவுத் துறை தெரி​வித்​துள்​ளது. விசா முடிந்த பிறகு அல்லது சட்டவிரோதமாக குடியேறிய குற்றத்துக்காக கடந்த ஜனவரி​யில் இருந்து இது​வரை 388 இந்​தி​யர்​கள், அமெரிக்​கா​வில் இருந்து நாடு கடத்​தப்​பட்​டு தாய்​நாடு வந்​தடைந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்