திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதி

By என். மகேஷ்குமார்

திருமலை: ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு தனது பேரன் தேவான்ஷ் பிறந்த நாளை முன்​னிட்​டு, நேற்று காலை தனது குடும்​பத்​தா​ருடன் ஏழு​மலை​யான் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்​தார்.

இதனை தொடர்ந்​து, பேரன் தேவான்ஷ் பிறந்த நாளை முன்​னிட்​டு, திருப்​பதி தேவஸ்​தானத்​தின் எஸ்​வி. அன்​ன​தான அறக்​கட்​டளைக்கு சந்​திர​பாபு நாயுடு ரூ.44 லட்​சத்​திற்​கான காசோலையை தேவஸ்​தான அறங்​காவலர் பிஆர். நாயுடு​விடம் வழங்​கி​னார்.

நேற்று காலை பத்​மாவதி விருந்​தினர் மாளி​கை​யில் ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு செய்​தி​யாளர்​களிடம் பேசி​ய​தாவது: திருப்​பதி ஏழு​மலை​யான் கோயில் என்​பது பல நூறு ஆண்​டு​களாக இந்து பக்​தர்​களின் உணர்​வு​களோடு பின்னி பிணைந்த ஒரு கோயி​லாகும். என்னை அலிபிரி​யில் நடந்த வெடி குண்டு சம்​பவத்​தி​லும் ஏழு​மலை​யான் தான் காப்​பாற்​றி​னார்.

திரு​மலை​யில் புனித தன்​மையை சீர்​குலைக்​கும் நிகழ்​வு​கள் நடத்த அனு​ம​திக்க மாட்​டோம். அலிபிரி பைபாஸ் சாலை​யில் மும்​தாஜ் ஹோட்​டல் கட்ட வழங்​கப்​பட்ட அனு​மதி ரத்து செய்​யப்​படும். மேலும், இந்​துக்​கள் அல்​லாதவர்​கள் திருப்​பதி தேவஸ்​தானத்​தில் பணி​யாற்ற அனு​மதி இல்​லை. இது இந்​துக்​களின் மனநிலையை பாதிக்​கும் செய​லாகும். 7 மலைகளும் ஏழு​மலை​யானின் சொத்​தாகும். இவ்​வாறு சந்​திர​பாபு நா​யுடு கூறி​னார்​.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்