அவுரங்கசீப்பை அடுத்து மீண்டும் சர்ச்சை: உ.பி.யில் கஜினி முகமதுவின் உறவினர் சையது சாலார் மசூத் காஜி விழாவுக்கு தடை

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உ.பி.​யின் சம்​பலில் ‘நேஜா’ எனும் பெயரில் ஆண்​டு​தோறும் முஸ்​லிம்​கள் ஒரு விழா நடத்​துகின்​றனர். இந்த விழா​வானது சையது சாலார் மசூத் காஜி என்​பவர் பெயரில் கடந்த 47 ஆண்​டு​களாக நடக்​கிறது. ஆனால், இந்த ஆண்டு மார்ச் 25-ல் தொடங்க இருந்த விழாவுக்கு சம்​பல் மாவட்ட காவல் துறை அனு​மதி அளிக்க மறுத்​துள்​ளது. இதற்கு நம் நாட்​டின் மீது படையெடுத்​தவர்​களை​யும், கொள்​ளை​யடித்​தவர்​களை​யும் கொண்​டாட தேவை​யில்​லை” என்று காரணம் கூறி​யுள்​ளது.

கஜ்​னா​வி​யில் இருந்து இந்​தி​யா​வுக்கு படையெடுத்து வந்த முஸ்​லிம் மன்​னர் முகமது கஜினி​யின் சகோ​தரி மகன்​தான் சாலார் மசூத் காஜி. கஜினி​யின் படை தளப​தி​யாக​வும் இருந்​தார். கடந்த 1206-ம் ஆண்டு சோம்​நாத் மீது படையெடுத்து கஜினி முகமது கொள்​ளை​யடித்​த​தாக வரலாற்று பதிவு​கள் உள்​ளன. அப்​போது கஜினி​யுடன் அவரது மரு​மகன் சாலார் மசூதும் இருந்​துள்​ளார்.

பிறகு ஒரு தனிப்​படை​யுடன் தற்​போதைய உ.பி.க்​கும் சாலார் மசூத் வந்​தார். சம்​பலில் ஆட்சி செய்த ராஜபுதன மன்​னனை கொன்​றார். இந்த வெற்​றி​யின் நினை​வாகவே அவரது பெயரில் சம்​பலிலும், அரு​கிலுள்ள முரா​தா​பாத் மற்​றும் சஹரான்​பூரிலும் நேஜா விழா நடத்​தப்​படு​கிறது. பிறகு சாலார் மசூத் நேபாள எல்​லை​யில் உள்ள பைரைச்​சிற்​கும் சென்​றார்.

இன்​றைய உ.பி.​யில் உள்ள பைரைச்​சில் அப்​போது குறுநில மன்​னர் சுஹல்​தேவ் ஆட்சி இருந்​தது. தம்​முடன் மேலும் 21 குறுநில மன்​னர்​களின் படைகளை சேர்த்து சாலார் மசூதை எதிர்​கொண்​டார் சுஹல்​தேவ். கடந்த 1034-ல் நிகழ்ந்த போரில் சுஹல் தேவ் படை​யால் சாலார் மசூத் கொல்​லப்​பட்​டார். அப்​போது பைரைச்​சிலேயே சாலார் மசூத் உடல் அடக்​கம் செய்​யப்​பட்​டது. அந்த கல்​லறை மீது 1250-ல் துக்​ளக் வம்​சத்​தின் நசிரூதீன் மகமூத், தர்கா கட்​டி​னார். தற்​போது, முஸ்​லிம்​கள் இடையே பிரபல​மான சாலார் மசூத் தர்கா​வுக்கு ஆண்​டு​தோறும் உருஸ் எனும் சந்​தனக்​கூடு விழா நடை​பெறுகிறது. இந்த விழாவுக்கு நிரந்தர தடை​வி​திக்க கோரி இந்​துத்​துவா அமைப்​பினர் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத்துக்கு கடிதம் எழு​தி​யுள்​ளனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் சஹரான்​பூர் காங்​கிரஸ் எம்​.பி. இம்​ரான் மசூத் கூறும்​போது, “மவுலானா ஹசரத் சாலார் மசூத் ஒரு சூபி புனித​ராக இருந்​தார். இதனால், அவரது பெயரில் நடக்​கும் பாரம்​பரிய விழாக்​களுக்கு அரசி​யல் காரணங்​களுக்​காக தடை விதிக்​கின்​றனர். கடந்த 2023 முதல் நேஜாவை சத்​பவனா விழா​வாக கொண்​டாடினர். இந்த ஆண்​டும் அதே வகை​யில் கொண்​டாட அனு​மதி வழங்​க​வில்​லை” என்​றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்