பெங்களூரு: கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததால் கடந்த 3ம் தேதி பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.2.67 கோடி ரொக்கப்பணமும், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் சிக்கின.
ரன்யா ராவை விசாரித்ததில் அவருக்கு சர்வதேச தங்க கடத்தல் கும்பல் மற்றும் பெங்களூருவின் முக்கிய புள்ளிகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூரு நட்சத்திர விடுதியின் உரிமையாளர் தருண் ராஜ் கைது செய்தனர். இதையடுத்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரன்யா ராவ் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
இவ்வழக்கு குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை அதிகாரிகள் பெங்களூருவில் நேற்று வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அதிகாரிகள தரப்பில் கூறியதாவது: பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் வழக்கமான சோதனைகள் அவருக்கு மேற்கொள்ளப்படவில்லை. அவருக்கு விஐபி அந்தஸ்து வழங்கி, விமானத்தில் இருந்து தனி பாதையில் செல்லஅனுமதித்துள்ளனர். கர்நாடக காவல்துறையில் உயரிய பொறுப்பில் இருந்த அதிகாரிகளின் உத்தரவால், போலீஸாரே அவரை வரவேற்று சோதனை வளையத்தில் இருந்து காப்பாற்றியுள்ளனர்.
இவ்வாறு அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பான தகவலை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் பொருளாதார குற்றங்களை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அறிக்கையாகவும் தாக்கல் செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago