பெங்களூரு: கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக கடந்த 3ம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.2.67 கோடி ரொக்கப்பணமும், ரூ.2.06 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் சிக்கின. இதையடுத்து அதிகாரிகள் அவரை மார்ச் 24ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது இந்த தங்கக் கடத்தலில் சில முக்கிய பிரமுகர்களுக்கும், பெரிய நகைக்கடை அதிபர்களுக்கும் சர்வதேச தங்க கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனிடையே சிபிஐ அதிகாரிகள் ரன்யா ராவ் மீது வழக்குப்பதிவு செய்து, மும்பை, பெங்களூரு விமான நிலையங்களில் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், ரன்யா ராவிடம் இருந்து தங்கத்தை வாங்கியதாக பெங்களூருவை சேர்ந்த நட்சத்திர விடுதி உரிமையாளரும் தொழிலதிபருமான தருண் கே ராஜை நேற்று கைது செய்தனர். அவரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர். தருண் கே ராஜூவிடம் விற்பனை செய்யப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தங்கக் கடத்தல் வழக்கில் ரன்யா ராவுக்கு அவரது வளர்ப்பு தந்தையும் போலீஸ் டிஜிபியுமான ராமசந்திர ராவ் உதவியதாக தகவல் வெளியானது. இதனால் கர்நாடக அரசு அவரை விசாரிக்குமாறு கர்நாடக சிஐடி (குற்றப்பிரிவு புலனாய்வு துறை) போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 mins ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago