நடிகை ரன்யா ராவ் மீதான தங்கக் கடத்தல் வழக்கில் டிஜிபியிடம் விசாரிக்க கர்நாடக அரசு உத்தரவு

By இரா.வினோத்


பெங்களூரு: கர்​நாடக போலீஸ் டிஜிபி ராமசந்​திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகை​யு​மான‌ ரன்யா ராவ் (32) துபா​யில் இருந்து 14.8 கிலோ தங்​கம் கடத்தி வந்​த​தாக கடந்த 3ம் தேதி பெங்​களூரு விமான நிலை​யத்​தில் கைது செய்​யப்​பட்​டார்.

இதுகுறித்து வழக்​குப்​ப​திவு செய்த வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி​கள் அவரது வீட்​டில் நடத்​திய சோதனை​யில் ரூ.2.67 கோடி ரொக்​கப்​பண​மும், ரூ.2.06 கோடி மதிப்​பிலான தங்க நகைகளும் சிக்​கின‌. இதையடுத்து அதி​காரி​கள் அவரை மார்ச் 24ம் தேதி வரை காவலில் எடுத்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். அப்​போது இந்த தங்​கக் கடத்​தலில் சில முக்​கிய பிர​முகர்​களுக்​கும், பெரிய நகைக்​கடை அதிபர்​களுக்​கும் சர்​வ​தேச தங்க கடத்​தல் கும்​பலுக்​கும் தொடர்பு இருப்​பது தெரிய​வந்​தது.

இதனிடையே சிபிஐ அதி​காரி​கள் ரன்யா ராவ் மீது வழக்​குப்​ப​திவு செய்​து, மும்​பை, பெங்களூரு விமான நிலை​யங்​களில் விசா​ரணையை தொடங்​கி​யுள்​ளனர். இந்நிலையில், ரன்யா ராவிடம் இருந்து தங்​கத்தை வாங்​கிய​தாக பெங்​களூருவை சேர்ந்த நட்​சத்​திர விடுதி உரிமை​யாள​ரு​ம் தொழில​திபரு​மான தருண் கே ராஜை நேற்று கைது செய்​தனர். அவரை வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அலு​வல​கத்​துக்கு கொண்டு சென்று விசா​ரணை மேற்​கொண்​டனர். தருண் கே ராஜூவிடம் விற்​பனை செய்​யப்​பட்ட தங்​கத்தை அதி​காரி​கள் பறி​முதல் செய்​திருப்​ப​தாக​வும் செய்​தி​கள் வெளி​யாகி​யுள்​ளன. இந்​நிலை​யில் தங்​கக் கடத்​தல் வழக்​கில் ரன்யா ராவுக்கு அவரது வளர்ப்பு தந்​தை​யும் போலீஸ் டிஜிபி​யு​மான ராமசந்​திர ராவ் உதவிய​தாக தகவல் வெளி​யானது. இதனால் கர்​நாடக அரசு அவரை விசா​ரிக்​கு​மாறு கர்​நாடக சிஐடி (குற்​றப்​பிரிவு புல​னாய்​வு துறை) போலீ​ஸாருக்​கு உத்​தர​விட்​டுள்​ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்