புதுடெல்லி: செந்தில் பாலாஜி அமைச்சரான பிறகு அரசு தரப்பு முக்கிய சாட்சியான தடயவியல்துறை அதிகாரி சாட்சியம் அளிக்க முன்வருவது இல்லை என உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பகிரங்கமாக குற்றம்சாட்டியது.
இதையடுத்து, 212 அரசுப் பணியாளர்கள் அவருக்கு எதிராக சாட்சிகளாக இருக்கும்போது அமைச்சர் பதவியில் அவர் தொடர விரும்புகிறாரா, இல்லையா என்பது குறித்து கேட்டு தெரிவிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த 2011-16 அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த தற்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 3 மோசடி வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகள் சென்னை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டி அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கில் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார். சுமார் 472 நாட்களுக்கு பிறகு கடந்தாண்டு செப்.26-ம் தேதி அவருக்கு உச்ச நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து வெளியே வந்த ஒருநாள் இடைவெளியில் கடந்த செப்.28-ம் தேதி அவர் மீண்டும் தமிழக அமைச்சராக பொறுப்பேற்றார்.
» கூட்டணி சலசலப்புக்கு இடையே ராகுல் காந்தியுடன் ஆதித்ய தாக்கரே சந்திப்பு
» நட்பு நட்புதான்... காதல் காதல்தான்! | காதலர் தினம் ஸ்பெஷல்
இந்நிலையில், செந்தில் பாலாஜியால் பாதிக்கப்பட்ட வித்யாகுமார் என்பவர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், செந்தில் பாலாஜிக்கு எதிரான பண மோசடி வழக்குகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை போலீஸார் குற்றவாளிகளாக சேர்த்துள்ளனர்.
இந்த வழக்கில் அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்வதற்கே பல மாதங்களாகி விடும். தற்போது அவர் ஆளுங்கட்சியின் அதிகாரமிக்க அமைச்சராக பதவி வகிப்பதால் சாட்சியம் அளிக்க யாரும் முன்வருவது இல்லை என்பதால் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘தற்போது அமைச்சராக பதவியில் இல்லை எனக்கூறி ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி, ஜாமீன் கிடைத்த மறுநாளே அமைச்சராக பதவியேற்று நிபந்தனையை மீறியுள்ளார். இந்த வழக்கில் 212 சாட்சிகள் அரசுப் பணியாளர்களாக இருக்கும் போது அவர்கள் எப்படி சாட்சியம் அளிப்பர்' என வாதிடப்பட்டது.
அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கின் முக்கிய சாட்சியாக இருக்கும் தடயவியல் துறை அதிகாரி, செந்தில் பாலாஜி அமைச்சர் ஆவதற்கு முன்பு வரை நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகி சாட்சியம் அளித்து வந்தார். ஆனால் செந்தில் பாலாஜி அமைச்சர் ஆன பிறகு அவர் சாட்சியம் அளிக்க முன்வருவதில்லை" என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
அதையடுத்து நீதிபதிகள், ‘பணமோசடி வழக்கில் 212 அரசுப் பணியாளர்கள் சாட்சிகளாக இருக்கும்போது செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியில் நீடிப்பது எப்படி சரியாகும்? அந்த சாட்சிகள் எப்படி தைரியமாக முன்வந்து அவருக்கு எதிராக சாட்சியம் அளிப்பர் என கேள்வி எழுப்பினர். பின்னர் செந்தில் பாலாஜிக்கு எதிரான இந்த குற்றச்சாட்டு மிக தீவிரமானது.
எனவே அவர் அமைச்சராக பதவியில் தொடர விரும்புகிறாரா, இல்லையா என்பது குறித்து அவருடைய கருத்தை கேட்டு தெரிவிக்க வேண்டுமென தமிழக அரசுக்கும், செந்தில் பாலாஜி தரப்புக்கும் உத்தரவிட்டு விசாரணையை வரும் மார்ச் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
2 days ago