புனேவில் ஏற்பட்டுள்ள ஜிபிஎஸ் தொற்று தண்ணீர் மூலம் பரவியது கண்டுபிடிப்பு

By செய்திப்பிரிவு

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே பகுதியில் ஏற்பட்டுள்ள ஜிபிஎஸ் (குய்லின்-பாரே) தொற்று தண்ணீர் மூலம் பரவியது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் புனேவில் கடந்த மாதம் ஜிபிஎஸ் (குய்லின்-பாரே) தொற்று பரவியது. அங்கு இதுவரை 166 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தொற்றுக்கு அங்கு ஏற்கெனவே 6 பேர் இறந்திருந்த நிலையில், சென்னையில் உள்ள குழந்தை சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 10 வயது சிறுவன் கடந்த மாதம் 31-ம் தேதி உயிரிழந்தான். இந்த சிறுவன் ஜிபிஎஸ் தொற்று காரணமாக இறந்தது நேற்று முன்தினம் உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் ஜிபிஎஸ் பலி எண்ணிக்கை 7-ஆக உயர்ந்துள்ளது.

ஜிபிஎஸ் தொற்று பரவியதற்கு ‘கேம்பிளோபேக்டர் ஜெஜுனி’ என்ற பாக்டீரியா தண்ணீர் மூலம் பரவியது காரணம் என மகாராஷ்டிரா சுகாதாரத்துறை துறை ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்