இன்போசிஸ் இணை நிறுவனர் மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை

By இரா.வினோத்


பெங்களூரு: பெங்​களூரு​வில் உள்ள இண்டியன் இன்ஸ்​டியூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறு​வனத்​தில் பேராசிரியர் சன்னா துர்​கப்பா (45) பணியாற்றி வந்தார். அவர் கடந்த 2014-ம் ஆண்டு பெங்​களூரு குடிமை​யியல் நீதி​மன்​றத்​தில் தன்னுடன் பணியாற்றிய பேராசிரியர்கள் சேனாபதி கிரிஷ் கோபால​கிருஷ்ணன், கோவிந்த ரங்க​ராஜன், ஸ்ரீதர் வாரியர், சந்தியா விஷ்வேஸ்​வ‌ரையா, ஹர கேவிஎஸ் தாசப்பா, பல்ராம், பி ஹமலதா மிஷி, சட்டபாத்​யாயா கே, பிரதீப் டி சௌகர், மனோகரன் ஆகியோர் மீது வழக்கு ஒன்றை தொடர்ந்​தார்.

அதில், “பட்​டியலினத்தை சேர்ந்த என்னை பொய்யான வழக்​கில் சிக்க வைத்து, சாதி ரீதியாக 18 பேராசிரியர்கள் திட்​டினர். என்னை பணியில் இருந்து நீக்கி விட்​டனர். சம்பந்​தப்​பட்ட 18 பேர் மீது வழக்​குப்​ப​திவு செய்ய போலீ​ஸாருக்கு உத்தரவிட வேண்​டும்” என கோரினார்.

10 ஆண்டு​களாக நடைபெற்று வந்த இவ்வழக்​கில், ‘‘குற்றம் சாட்​டப்​பட்ட 18 பேர் மீது சதாசிவ நகர் போலீ​ஸார் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்​தின்​கீழ் வழக்​குப்​ப​திவு செய்து விரைவாக விசா​ரித்து முடிக்க வேண்​டும்” என பெங்​களூரு குடிமை​யியல் நீதி​மன்றம் உத்தர​விட்​டது.

இதை எதிர்த்து 18 பேரும் கர்நாடக உயர் நீதி​மன்​றத்​தில் அவசர மனு தாக்கல் செய்​தனர். இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி எஸ்.ஆர்​.கிருஷ்ணகு​மார், இந்த வழக்கை விசா​ரிக்க போலீ ஸாருக்கு இடைக்கால தடை விதித்​தார். இது​குறித்து கர்​நாடக அரசு 14 நாட்​களுக்​குள் ப​தில் அளிக்​கு​மாறு உத்​தர​விட்​டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

2 days ago

மேலும்