டெல்லி அணி வகுப்பில் முதல் முறையாக 3 அரசு பள்ளி பேண்ட் இசை குழு பங்கேற்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற பிரம்மாண்ட அணிவகுப்பில், முதல் முறையாக 3 அரசு பள்ளி பேண்ட் இசைக் குழு இடம் பெற்றது.

பள்ளி பேண்ட் இசைக் குழுக்களுக்கான தேசியளவிலான போட்டி, டெல்லி மேஜர் தியான் சந்த் தேசிய ஸ்டேடியத்தில் கடந்த 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடைபெற்றன. இதன் இறுதி போட்டியில் 16 பள்ளிகளைச் சேர்ந்த பேண்ட் இசைக் குழுக்கள் பங்கேற்றன.

இவற்றிலிருந்து ஜார்கண்ட் மாநிலத்தின் படாம்டா நகரில் உள்ள ஸ்ரீ கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா மாணவிகளின் பைப் பேண்ட் குழு , சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த அரசு மேல் நிலைப் பள்ளி பேண்ட் குழு , கர்நாடகா மாநிலம் பெலகாவியில் உள்ள கேந்திரிய வித்தியாலயா மாணவர்களின் பைப் இசைக் குழு தேர்வு செய்யப்பட்டு டெல்லி குடியரசு தினவிழா அணி வகுப்பி்ல் நேற்று பங்கேற்றன. இந்த 3 பள்ளிகளுமே அரசு பள்ளிகள். டெல்லி குடியரசு தினவிழா அணி வகுப்பில் 3 அரசு பள்ளிகளின் பேண்ட் குழு இடம் பெற்றது இதுவே முதல் முறை. இவர்கள் அனைவரது பாராட்டையும் பெற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்