ராஜ்ஜியம் இல்லை, கிரீடம் இல்லை: கேரளாவின் பழங்குடியின மன்னருக்கு குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: டெல்​லி​யில் நடைபெறும் குடியரசு தின விழா​வில் பங்கேற்க கேரளா​வில் பழங்​குடி​யினத்​தைச் சேர்ந்த மன்னருக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் காஞ்​சி​யார் பஞ்சா​யத்​துக்கு உட்பட்டது கோழிமலை. இங்கு மன்னன் பழங்​குடியின மக்கள் வாழ்​கின்​றனர். இவர்கள் பழங்​காலத்​தில் சோழர்​களுக்​கும் பாண்​டியர்​களுக்​கும் ஏற்பட்ட போரின்போது தமிழ்​நாட்​டில் இருந்து கேரள பகுதிக்கு குடியேறிய​வர்​கள். இந்த பழங்​குடியின மக்களுக்கு ராஜா உண்டு. ஆனால் ராஜ்ஜியம் இல்லை. தலைநகர் உண்டு.

தற்போதைய மன்னன் பழங்​குடியின மக்களின் ராஜாவாக ராமன் ராஜா மன்னன் இருக்​கிறார். மன்னன் பழங்​குடியின ராஜா ஆர்யன் ராஜா மன்னன் காலமானதை அடுத்து கடந்த 12 ஆண்டு​களுக்கு முன்னர் ராமன் முடிசூடி​னார். ஆனால், கிரீடம் இருக்​காது. நாடு இருக்​காது. கேரளா​வில் பழங்​குடி​யினத்தை சேர்ந்த ஒரே ராஜா இவர்​தான். டெல்​லி​யில் நாளை நடைபெறும் குடியரசு தின விழா​வில் பங்கேற்க பழங்​குடி​யினத் தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது. அவர்​களில் ராமன் ராஜா மன்னனும் ஒருவர்.

இவரது கிராமத்​தில் உள்ள 3,000 மன்னன் பழங்​குடியின குடும்​பங்​களுக்கு ராமன்​தான் ராஜா. இந்த பழங்​குடி​யினத்​தவர்கள் விவசா​யம், விவசாய தினக்​கூலிகளாகவே இருக்​கிறார்​கள். இவர் கிரீடம் அணியா​விட்​டால், பொது நிகழ்ச்​சிகளில் தலைப்​பாகை அணிந்து வருவார். ராமனுடைய வார்த்​தைக்கு அவரது இன மக்கள் கட்டுப்​பட்டு நடப்​பார்​கள். தங்களுடைய ராஜாவாகவே அவரை மதிக்​கின்​றனர். இவரது தலைநகரம் கோழிமலை கிராமம்​தான். இந்நிலை​யில், ராமன் ராஜா மன்னன், இவரது மனைவி பினு​மோல் ஆகியோர் நாளை டெல்​லி​யில் நடைபெறும் குடியரசு தின விழா​வில் பங்கேற்​கின்​றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்