பெங்களூரு: கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் 50 மீட்டர் ஆழமான பள்ளத்தில் லாரி கவிழ்ந்த விபத்தில் லாரியில் பயணித்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலை 63-ல், யெல்லாபூர் தாலுகாவில் உள்ள குல்லாபூர் கிராமத்திற்கு அருகில் இந்த விபத்து நேரிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், ஹாவேரி மாவட்டத்தின் சவனூர் என்ற பகுதியில் இருந்து கும்தா சந்தைக்கு காய்கறிகளை விற்கச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
லாரியில் 30-க்கும் மேற்பட்டோர் இருந்ததாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் சவனூரைச் சேர்ந்தவர்கள். காயமடைந்தவர்களை காவல்துறையினரும், அப்பகுதி மக்களும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேற்குத் தொடர்ச்சி காவல் ஆய்வாளர் அமித் சிங் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டனர்.
“பள்ளம் காரணமாகவோ அல்லது ஓட்டுநர் சமநிலையை இழந்ததன் காரணமாகவோ லாரி கவிழ்ந்திருக்கலாம். விபத்துக்கான காரணத்தை நாங்கள் கண்டறிந்து வருகிறோம்.” என்று காவல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
» ‘மகள்களை காப்போம்; மகள்களை படிக்க வைப்போம்’ இயக்கத்தின் வெற்றி: பிரதமர் பெருமிதம்
» தயாரிப்பாளர் தில்ராஜு வீடு, அலுவலகங்களில் வருமான வரி அதிகாரிகள் தீவிர சோதனை
கேஎம்சி மருத்துவமனை இயக்குநர் எஸ்.எஃப். கம்மர் கூறுகையில், “ஒரு நோயாளி இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். மீதமுள்ள 11 பேர் எங்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை தொடர்பாக பரிசோதனைகள் நடைபெற உள்ளன. தற்போது அவர்கள் ஆபத்தில் இருந்து மீண்டுவிட்டனர். எனினும், தொடர்ச்சியான கண்காணிப்பு தேவை.” என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago