புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் சம்பலில் சமீபத்திய வன்முறையை தொடர்ந்து அங்குள்ள நிலைமையை மதிப்பிடுவதற்காக ராகுல் காந்தி உள்ளிட்ட உ.பி. காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று பயணம் மேற்கொள்கின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் நகரில் முகலாயர் கால மசூதி உள்ளது. இதில் கடந்த 24-ம் தேதி இந்திய தொல்லியல் துறை கள ஆய்வு மேற்கொண்டபோது அங்கு வன்முறை வெடித்தது. இந்து கோயிலை இடித்துவிட்டு அங்கு மசூதி கட்டப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கள ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் சம்பல் வன்முறை, கலவரத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் உட்பட பலர் காயம் அடைந்தனர்.
இந்த நிலையில் சம்பல் வன்முறைக்கு பிறகு அங்கு நிலைமையை மதிப்பிடுவதற்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட உ.பி. காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேரும் இன்று சம்பல் செல்கின்றனர். இவர்களுடன் வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தியும் இணைந்துகொள்ள வாய்ப்பிருப்பதாக உ.பி. காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் கூறினார்.
» திருச்சானூரில் 6-ம் நாள் பிரம்மோற்சவம்: தங்கத் தேரில் பத்மாவதி தாயார் பவனி
» ஆசியாவின் மிகச் சிறந்த நாணயங்கள்: இந்திய ரூபாய்க்கும் இடம்
காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் மதியம் 2 மணிக்கு சம்பல் சென்றடைவார்கள் என்று மாநில காங்கிரஸ் நிர்வாகி சச்சின் சவுத்ரி கூறினார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
19 mins ago
இந்தியா
46 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago