ஜெர்மனியில் பணியாற்றிய பொறியாளர் பெங்களூருவில் யாசகர் ஆன அவலம்: வைரலான வீடியோ

By இரா.வினோத்


பெங்களூரு: பெங்​களூருவை சேர்ந்த சமூக வலைதள பயனர் ஷரத் அண்மை​யில் யாசகர் ஒருவரை பற்றிய வீடியோவை தனது இன்ஸ்​டாகிராம் பக்கத்​தில் பகிர்ந்​தார்.

பெங்​களூரு ஜெயநகர் சாலை​யோரத்​தில் பதிவு செய்​யப்​பட்ட அந்த வீடியோ​வில் பேசிய நடுத்தர வயதுடைய ஆண், ''நான் ஜெர்​மனி​யில் உள்ள ஃபிராங்க்ஃபர்ட் நகரில் 2013-ம் ஆண்டு பொறி​யாளராக பணியாற்றினேன். அப்போது அங்கு எம்.எஸ். முடித்​தேன். பின்னர் க்ளோபல் வில்​லேஜில் மைண்ட் ட்ரீ நிறு​வனத்​தில் நல்ல சம்பளத்​தில் வேலை​யில் இருந்​தேன். பின்னர் பெங்​களூரு திரும்பி ஒரு பன்னாட்டு நிறு​வனத்​தில் பெரிய பொறுப்​பில் இருந்​தேன்.

காதல் தோல்வி: அப்போது ஒரு பெண்ணை காதலித்த வந்த நிலை​யில், ஒரு மோசமான சம்பவத்​தால் எல்லா​வற்​றை​யும் இழந்​தேன். எனது வேலை பறிபோன நிலை​யில், காதலும் தோல்​வி​யில் முடிந்​தது. திடீரென எனது பெற்​றோரை​யும் இழந்​த​தால், நடுத்​தெரு​வுக்கு வந்து​ விட்​டேன். இப்போது மதுபோதைக்கு அடிமை​யாகி யாசகம் பெற்று வாழ்க்கையை நடத்து​கிறேன்'' என விரக்​தி​யோடு கூறினார். இந்த வீடியோ​வில் அவர் தனது வாழ்க்கையை ஆங்கிலத்​தில் விவரித்து கூறியது பார்​வை​யாளர்களை ஈர்த்​துள்ளது. சமூக வலை​தளங்​களில் வீடியோ வெளியாகி வேகமாக பர​வி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்