உத்தர பிரதேச இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சிக்கு தோல்வி ஏன்?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உ.பி.யில் 2027 சட்டப்​பேரவை தேர்​தலுக்கான அரை இறுதிப் போட்​டியாக 9 தொகு​திகளுக்கான இடைத்​தேர்தல் கருதப்​பட்​டது. ஆனால் சமாஜ்வாதி வெறும் 2 தொகு​தி​களில் மட்டுமே வெற்றி பெற்றுள்​ளது. இந்த இரு தொகு​தி​களில் கர்ஹாலில், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் எம்எல்​ஏவாக இருந்​தார். இங்கு சமாஜ்வாதி சார்​பில் லாலு யாதவின் மருமக​னும், பாஜக சார்​பில் முலாயம் சிங்​கின் மருமக​னும் போட்​டி​யிட்​டனர். இறுதி​யில் சமாஜ்வா​தி​யின் தேஜ் பிரதாப் யாதவ் வெற்றி பெற்​றார்.

மற்றொரு தொகு​தியான சிசா​மு​வில் சமாஜ்வாதி வேட்​பாளர் நசீம் சோலங்கி வெற்றி பெற்​றார். இந்த தொகு​தி​யில் முஸ்​லிம்கள் அதிகம் என்ப​தால் சமாஜ்வாதி மீண்​டும் வெற்றி பெற்றுள்​ளது. சமாஜ்வா​தி​யின் தோல்விக்கான பின்னணி​யில் அக்கட்​சிக்கு தலித் வாக்​குகள் கிடைக்க​வில்லை எனக் கருதப்படு​கிறது.

இடைத்​தேர்​தலில் காங்​கிரஸ் போட்​டி​யிடாததால் ராகுல், பிரி​யங்கா பிரச்சாரம் செய்யவில்லை. மேலும் பாஜகவுக்கு எதிராக அரசி​யலமைப்பு சட்டம் குறித்து பிரச்சாரத்தில் பேசாதது போன்​ற ​காரணங்​கள்​ ச​மாஜ்வா​தி​யின்​ தோல்​விக்​கு ​காரண​மாகி ​விட்​டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

19 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்