ஜார்க்கண்ட் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன்: ராஞ்சியில் 28-ம் தேதி பதவியேற்பு

By செய்திப்பிரிவு

ராஞ்சி: ஜார்க்​கண்ட் மாநில ஆளுநர் சந்தோஷ் கங்வாரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஹேமந்த் சோரன். இதையடுத்து ராஞ்​சி​யில் 28-ம் தேதி நடைபெறும் விழா​வில் மீண்டும் முதல்வர் பதவி​யேற்​கிறார்

ஜார்க்​கண்ட் மாநிலத்​தில் மொத்தம் உள்ள 81 சட்டப்​பேர​வைத் தொகு​தி​களுக்கு தேர்தல் நடைபெற்​றது. இதில் ஆளும் ஜார்க்​கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்​எம்), காங்​கிரஸ் மற்றும் சில கட்சிகள் இண்டியா கூட்​ட​ணியாக போட்​டி​யிட்டன. பாஜக தலைமை​யில் அதன் கூட்டணி கட்சிகள் போட்​டி​யிட்டன. இந்த தேர்தலில் ஜேஎம்எம் 34, காங்​கிரஸ் 16 தொகு​திகள் உட்பட மொத்தம் 56 இடங்​களில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க​வைத்​துக் கொண்​டது.

பாஜக 21 மற்றும் கூட்டணி கட்சிகள் 3 தொகு​திகள் என மொத்தம் 24 தொகு​தி​களில் பாஜக கூட்டணி வெற்றி பெற்​றது. இந்நிலை​யில், ஜார்க்​கண்ட் ஆளுநர் சந்தோஷ் கங்வாரை, ஜேஎம்எம் தலைவரும் முன்​னாள் முதல்​வருமான ஹேமந்த் சோரன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, முதல்வர் பதவியை ராஜினாமா செய்​வதற்கான கடிதத்தை அவரிடம் வழங்​கினார். மேலும், மாநிலத்​தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதையடுத்து, ஜார்க்​கண்​டில் ஆட்சி அமைக்க தனிப்​பெரும்​பான்மை பெற்ற ஜேஎம்எம் கட்சிக்கு ஆளுநர் சந்தோஷ் அழைப்பு விடுத்​தார். முன்னதாக நேற்று காலை ஹேமந்த் சோரன் தலைமை​யில் இண்டியா கூட் டணி கட்சிகள் சார்​பில் வெற்றி பெற்ற எம்எல்​ஏ.க்​களின் கூட்டம் நடைபெற்​றது. இதில் ஹேமந்த் சோரன் முதல்​வராக தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார்.

இதையடுத்து ராஞ்​சி​யில் 28-ம் தேதி பதவி​யேற்பு விழா நடைபெற உள்ளது. முதல்​வராக ஹேமந்த் சோரன் பதவி​யேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் சந்தோஷ் பதவிப் பிரமாணம் செய்து வைக்​கிறார். இதுகுறித்து காங்​கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் அகமது மிர் நேற்று கூறுகை​யில், ‘‘ஜார்க்​கண்​டில் மீண்​டும் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவி​யேற்​பார்’’ என்று உறுதிப்​படுத்​தினார். எனினும், இந்த முறை துணை முதல்வர் பதவியை காங்​கிரஸ் கேட்​கும் என்று கூறப்​படு​கிறது.

பர்ஹைத் தொகு​தி​யில் பாஜக வேட்​பாளர் கம்லி​யால் ஹெம்​பிராமை விட ஹேமந்த் சோரன் 39,791 வாக்​குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்​றார். ஹேமந்த் மனைவி கல்பனா சோரன், கண்டே தொகு​தி​யில் 17,142 வாக்​குகள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றார். சட்டப்​பேர​வைத் தேர்​தலில் ஜார்க்​கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 23.44 சதவீத வாக்​குகளே பெற்​றது. ஆனால், பாஜக 68 இடங்​களில் போட்​டி​யிட்டு 21 தொகு​திகளை கைப்​பற்றியது. இந்த மாநிலத்​தில் பாஜக 33.18 சதவீத வாக்​குகள் பெற்​றது. ஆனால், பாஜக.வுக்கு தனிப்​ பெரும்​பான்மை கிடைக்க​வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்