ராமர் கோயில் பிரச்சினையை அடுத்த ஆண்டு எழுப்புவோம் என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் மூத்த தலைவர் விநாயக் ராவ் தேஷ்பாண்டே செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"தற்போது ராமர் கோயில் பிரச்சினை அமைதிப்படுத்தப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே அயோத்தியில் நிரந்தரமான ராமர் கோயில் எழுப்பப்படும். எனினும், அடுத்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் `ராமோத்ஸவ்' கொண்டாட்டத்தின் போது ராமர் கோயில் பிரச்சினையை எழுப்ப உள்ளோம். மேலும், உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. `லவ் ஜிஹாத்' எனும் இஸ்லாமிய ஆண்கள், காதல் என்ற பெயரில் வேற்று மதப் பெண்களைக் குறிவைக்கும் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இருப்பதாகக் கூறியுள்ளது.
இளைஞர்களுக்கு இந்து மதத்தின் பெருமைகளை விளக்கும் விதத்தில் வரும் நவம்பர் மாதம் 21 முதல் 23-ம் தேதி வரை டெல்லியில் `உலக இந்து மாநாடு' நடத்தப்பட இருக்கிறது" என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago