புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி (தேமாக) தலைமையிலான இண்டியா கூட்டணி 50 இடங்களில் முன்னிலை வகித்து வருவதை அடுத்து, அக்கூட்டணி ஆட்சி அமைக்க இருக்கிறது.
90 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், இண்டியா கூட்டணி சார்பில், தேசிய மாநாட்டுக் கட்சி 51 தொகுதிகளிலும், காங்கிரஸ் 32 தொகுதிகளிலும், சிபிஎம் ஒரு தொகுதியிலும், ஜம்மு காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. நட்பு ரீதியில் 5 தொகுதிகளில் போட்டியிடவும் தீர்மானிக்கப்பட்டது.
பாஜக தனித்து போட்டியிட்டது. மொத்தமுள்ள 62 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்திய அக்கட்சி மீதமுள்ள 28 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தவில்லை. மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சி 81 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த தேர்தலில், மொத்தமாக 63.88 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. பகல் 1 மணி நிலவரப்படி மொத்தமுள்ள 90 தொகுதிகளில் தேசிய மாநாட்டுக் கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 39 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அந்த வகையில் இந்தக் கட்சி 42 இடங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை கொண்டுள்ளது. இதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், சிபிஎம் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன. மொத்தத்தில் இண்டியா கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக இக்கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது.
» ஹரியானாவில் 48 இடங்களில் முன்னிலை: 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்கிறது பாஜக
» ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவு: காங்., - தேசிய மாநாடு கட்சி கூட்டணி 40+ இடங்களில் முன்னிலை
62 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. 23 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மொத்தத்தில் 29 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பாஜக பெற்றுள்ளது. மெகபூபா முஃப்தி தலைமையிலான கட்சி 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை தலா ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கின்றன.
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக்கூடிய காஷ்மீர் பள்ளத்தாக்கில் இண்டியா கூட்டணி அதிக வெற்றியைப் பெற்றுள்ளது. அதேபோல், இந்துக்கள் அதிகம் வசிக்கக்கூடிய ஜம்முவில் பாஜக அதிக வெற்றியைப் பெற்றுள்ளது.
அடுத்த முதல்வர் யார்? - ஜம்மு காஷ்மீரின் அடுத்த முதல்வராக தேசிய மாநாட்டுக்கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. இவர், இந்த தேர்தலில் ஒமர் அப்துல்லா கந்தர்பால், புட்காம் என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலும் அவர் முன்னிலை வகித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
இந்தியா
50 mins ago
இந்தியா
59 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
2 days ago
இந்தியா
2 days ago