மும்பை: மகாராஷ்டிராவில் தாங்கர் சமூகத்தினருக்கு நாடோடி பழங்குடியினர் (என்.டி) என்ற பிரிவின் கீழ் 3.5% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில் 7% இடஒதுக்கீடு கொண்ட எஸ்டி பிரிவில் தங்களை சேர்க்க வேண்டும் என்று தாங்கர் சமூகத்தினர் கோரி வருகின்றனர். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தாங்கர் சமூகத்தை சேர்ந்த 6 பேர் பந்தர்பூரில் கடந்த மாதம் 9-ம் தேதி முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
தாங்கர் சமூகத்தினரின் இந்த கோரிக்கைக்கு துணை சபாநாயகர் நர்ஹரி ஜிர்வால் தலைமையிலான மகாராஷ்டிர எஸ்டி எம்எல்ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் நர்ஹரி ஜிர்வால் உள்ளிட்ட எஸ்டி எம்எல்ஏ.க்கள் மாநில தலைமைச் செயலகமான மந்திரலயாவின் 3-வது மாடியில் இருந்து 2 மாடியில் கட்டப்பட்டுள்ள பாதுகாப்பு வலையில் குதித்து நேற்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தர்ணா போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரித்த அவர்கள், தங்களின் நீண்டகால கோரிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஷிண்டேவை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago