அஜ்மீர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரில் முழு கொள்ளளவு சரக்கை சுமந்து வந்த ரயிலை கவிழச் செய்யும் சதி நோக்கில் தலா 70 கிலோ எடையுள்ள 2 சிமெண்ட் துண்டுகள் அடையாளம் தெரியாத நபர்களால் ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டன.
சிமெண்ட் துண்டுகள் மீதுசரக்கு ரயில் மோதிய நிலையிலும், தடம்புரளாமல் எந்தவித சேதமும் இன்றி ரயில் தொடர்ந்து ஓடியது. இந்நிலையில், ரயில்வே ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் ரயில்வே சட்டம் மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தலை தடுக்கும் சட்டம் ஆகியவற்றின்கீழ் மாங்கலிய வாஸ் காவல் நிலையத்தின் போலீஸார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.