ஹரியானா தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் கண்ணீர்விட்டு அழுத பாஜக முன்னாள் எம்எல்ஏ

By செய்திப்பிரிவு

சண்டிகர்: ஹரியானா தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காததால் பாஜக முன்னாள் எம்எல்ஏ கண்ணீர் விட்டு அழுத வீடியோ வைரல் ஆகி உள்ளது.

ஹரியானா சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில்தனது பெயர் இடம்பெறாததால், முன்னாள் எம்எல்ஏ ஷசி ரஞ்சன் பார்மர் கண்ணீர் விட்டு அழுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

அந்த வீடியோவில், ரஞ்சனிடம் ஒரு செய்தியாளர் பேட்டி எடுக்கிறார். அப்போது, பாஜக வேட்பாளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம்பெறாதது ஏன் என கேட்கிறார். அதற்கு,ரஞ்சன், “நான் பிவானி அல்லது டோஷம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தேன். என்னுடைய பெயர் பட்டியலில் இடம்பெறும் என நினைத்திருந்தேன். ஆனால் என் பெயர் இல்லை”என கூறிவிட்டு அழுகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE