தொண்டையில் பூரி சிக்கி பெண் பலி

தொண்டையில் பூரி சிக்கி மூச்சடைப்பு ஏற்பட்டதால் ஒரு பெண் உயிரிழந்தார்.

தெலங்கானா மாநிலம், நிஜாமா பாத் மாவட்டம், போச்சம்மாள் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராதா (37). செவ்வாய்க்கிழமை காலை அவர் பூரி சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கிக் கொண்டது. இதனால் இவர் மூச்சுவிட முடியாமல் அவதிப்பட்டார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவ மனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு ராதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

ராதாவின் சகோதரர் ரமேஷ், தனது அக்காவின் சாவில் மர்மம் இருப்பதால் யாராவது உணவில் விஷம் கலந்து இருக்கலாம் என நிஜாமாபாத் போலீஸில் புகார் செய்தார்.

இதனை தொடர்ந்து போலீஸார் ராதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிஜாமாபாத் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனையில், பூரி தொண்டையில் சிக்கி மூச்சு திணறி ராதா உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்