வங்கதேச விவகாரத்தில் பாகிஸ்தான் தலையீடா? - ராகுல் காந்தி கேள்வி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அனைத்து கட்சி கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, ‘‘டாக்காவில் நடந்த செயல்களில் வெளிநாட்டு சக்திகள், குறிப்பாக பாகிஸ்தானின் தலையீடு இருப்பதாக செய்திகள் வந்துள்ளன’’ என்றார்.

அதற்கு விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், ‘‘அந்த கோணத்திலும் விசாரித்து வருகிறோம். வங்கதேசத்தின் நிலைமையை பிரதிபலிக்கும் வகையில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் தனது சமூக ஊடக டிஸ்பிளே படத்தை தொடர்ந்து மாற்றி வந்ததாக செய்திகள் வெளியாகின. இது ஏதாவது பெரிய விஷயத்தை சுட்டிக் காட்டுகிறதா என்றும் ஆய்வு செய்கிறோம்’’ என்றார். பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

இந்த விஷயத்தில், எதிர்க்கட்சிகள் சரியான புரிதலுடன் ஒருமித்த ஆதரவை தெரிவித்துள்ளதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் பாராட்டு தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE