சர்வதேச விண்வெளி மையம் செல்ல இந்திய வீரர் தேர்வு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இஸ்ரோ, நாசா இணைந்து சர்வதேச விண்வெளி மையத்துக்கு வீரர்களை அனுப்பும் திட்டத்துக்கு அமெரிக்காவின் ஆக்ஸிஓம் ஸ்பேஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

இதில் பயணம் செய்ய, ககன்யான் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்ட விமானப்படை விமானிகள் குழுவில் இருந்து இளம் வீரரான குரூப் கேப்டன் சுபான்சு சுக்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் விண்வெளிப் பயணம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால், இவருக்கு மாற்றாக அனுப்ப குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ண நாயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர்கள் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்கான பயிற்சியை இந்த வாரம் தொடங்குகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE