டெல்லி மதுபான விற்பனை வழக்கு: யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவன சிஇஓவுக்கு சம்மன்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லியில் சில்லறை விற்பனை கடைகளுக்கு மதுபானம் விற்பனை செய்தது தொடர்பான தகவல்களை அளிக்க யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்துக்கு டெல்லிபோலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து டியாஜியோ தரப்பு கூறுகையில், ‘‘கடந்த 2017முதல் 2020-க்கு இடையே டெல்லியில் மதுபான கடைகளுக்கு விற்பனை செய்த விவரங்களின் முழுஅறிக்கையை ஜூலை 26-க்குள்நேரில் ஆஜராகி வழங்க டெல்லிபோலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது. மற்ற நிறுவனங்களும் இதுபோன்ற சம்மன்களை பெற்றிருக்கலாம். ஆனால், ராய்டர்ஸ்நிறுவனம் குறிப்பிட்டுள்ளதைப் போல சிஇஓ ஹினா நாகராஜன்பெயரை குறிப்பிட்டு எந்தவிதசம்மனும் அனுப்பப்படவில்லை. நிறுவனத்தின் சார்பில் ஒருபிரதிநிதி போலீஸாரிடம் ஆஜராகிவிளக்கம் அளிக்கவே கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எப்போதும்போல் அதிகாரிகளுக்கு முழுஒத்துழைப்புடன் செயல்படுவோம்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE