அமித் ஷாவுடன் அஜித் பவார் சந்திப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.

மகாராஷ்டிராவில் வரும் அக்டோபர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் மகாயுதி கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிஆகியவை இணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளன. இதையடுத்து தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அடுத்ததாக வரும் 28-ம் தேதியும் இவர்கள் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE