மத்திய பட்ஜெட் 2024-ல் பிஹார், ஆந்திராவுக்கு ‘சிறப்பு’ கவனிப்பு: அறிவிப்புகள் என்னென்ன?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மத்திய பட்ஜெட்டில் பிஹார், ஆந்திர மாநிலங்களுக்கு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) 2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலுக்கு பிறகு புதிய அரசு அமைந்திருப்பதால் நடப்பு 2024-25 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக தாக்கல் செய்யும் 7-வது பட்ஜெட் ஆகும். மத்திய அமைச்சரவை ஒப்புதலுடன் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன் ஆந்திரா மற்றும் பிஹாருக்கு சிறப்பு திட்டங்களை அறிவித்தார். மேலும், தனது பேச்சின்போது சந்திரபாபு நாயுடுவின் கனவுத் திட்டமான பொலாவரம் நீர்ப்பாசன திட்டத்துக்கு நிதி வழங்க மத்திய அரசு உறுதியாக கூறினார்.

சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு பிஹாரின் கயாவில் உள்ள விஷ்ணுபாத் கோயில் மற்றும் மஹாபோதி கோயில் மேம்பாட்டுக்கான திட்டங்களை மத்திய அரசு மேற்கொள்ளும்.

முக்கியத்துவம் ஏன்? - மக்களவை தேர்தலில் பெரும்பான்மை இல்லாத பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர, ஆந்திராவை சேர்ந்த தெலுங்கு தேசம் மற்றும் பிஹாரை சேர்ந்த ஜனதா தளம் கட்சிகள் கூட்டணியுடன் ஆட்சி அமைத்தது. இந்த இருகட்சிகளின் முக்கிய கோரிக்கையாக மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து இருந்த நிலையில், இதுவரை சிறப்பு அந்தஸ்து தரப்படவில்லை. இந்த நிலையில்தான் தற்போது பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பிஹாருக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. வாசிக்க > மத்திய பட்ஜெட் 2024-25: முக்கிய அம்சங்கள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE