மணிப்பூரில் 4 ஆண்டுகளில் சட்டவிரோத கஞ்சா சாகுபடி சரிவு

By செய்திப்பிரிவு

இம்பால்: மணிப்பூரில் 2018-ம் ஆண்டில் ‘போதைக்கு எதிரான போர்’ திட்டம் தொடங்கப்பட்டது. இந்ததிட்டத்தின் கீழ் மலையில் சட்டவிரோதமாகக் கஞ்சா சாகுபடி செய்யப்படுவதைத் தடுக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, மார்சாக்அமைப்பு 2021-ம் ஆண்டிலிருந்து கஞ்சா விளைச்சல் குறித்து கணக்கெடுப்பு நடத்தியது.

இதில் கடந்த 2022-23-ல் 16,632.29 ஏக்கர் பரப்பளவில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்ட நிலையிலிருந்து 2023-24-ல்11,288.07 ஏக்கராக குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 32.13சதவீதம் வரை கஞ்சா சாகுபடி சரிந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE