கடும் வெப்ப அலையில் 62 கோடி பேர் இந்தியாவில் பாதிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அமெரிக்காவின் பருவநிலை மத்திய ஆய்வுக் கூடத்தின் விஞ்ஞானிகள் குழு நேற்று வெளியிட்ட அறிக்கை.

இந்த ஜூன் மாதம் சுட்டெரித்த வெயிலின் காரணமாக இந்தியாவில் 61.9 கோடி, சீனாவில் 57.9 கோடி, இந்தோனேசியாவில் 23.1 கோடி, நைஜீரியாவில் 20.6 கோடி, பிரேசில் நாட்டில் 17.6 கோடி, வங்கதேசத்தில் 17.1 கோடி, அமெரிக்காவில் 16.5 கோடி, ஐரோப்பிய நாடுகளில் 15.2 கோடி, மெக்சிகோவில் 12.3 கோடிமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலக மக்கள் தொகையில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஜூன் 16-ல்இருந்து 24 வரையிலான நாட்களில் அதீத வெப்பத்தின் தாக்கத்தை அனுபவித்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE