தன் பாலின சேர்க்கை விவகாரம்: சூர‌ஜ் ரேவண்ணா மீது மேலும் ஒருவர் புகார்

By இரா.வினோத்


பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் மஜத எம்எல்சியுமான‌ சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு இளைஞர் தன் பாலின சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தியதாக புகார் அளித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, போலீஸார் சூரஜ் ரேவண்ணா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே சூரஜ் ரேவண்ணாவின் தம்பியும், மஜத எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து 5 பெண்கள் அவருக்கு எதிராக அளித்த புகாரின்பேரில், பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டு பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனுவை பெங்களூரு மாநகர கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

இதனிடையே பிரஜ்வலின் தந்தையும் மஜத எம்எல்ஏவுமான ரேவண்ணாவும் (66) வீட்டு பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் உள்ளார். ரேவண்ணாவின் மனைவி பவானி யும் முன் ஜாமீன் பெற்றுள்ளார்.

இந்நிலையில், பிரஜ்வலின் அண்ணனும் மஜத எம்எல்சியுமான சூரஜ் ரேவண்ணா (36) மீது மஜதவை சேர்ந்த 27 வயதான தொண்டர் ஒருவர் தன்பாலின பாலியல் புகார் அளித்தார். ஜூன் 16-ம் தேதி அவரது பண்ணை வீட்டில் கட்டாயப்படுத்தி தன்பாலின சேர்க்கையில் ஈடுபடுத்தியதாக அவர் மீது புகார் தெரிவித்தார். இதன் பேரில் ஹொலேநர்சிப்பூர் போலீஸார் சூரஜ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே ஹாசனை சேர்ந்த 30 வயதான மஜத தொண்டர் ஒருவர், கரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் சூரஜ் தன்னை கட்டாயப்படுத்தி தன்பாலின சேர்க்கையில் ஈடுபட்டதாக புகார்அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய ஹொலேநர்சிப்பூர் போலீஸார் சூரஜ் மீது 4 பிரிவுகளில் மற்றொரு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்