முதுநிலை நீட் தேர்வு தள்ளிவைப்பு; நாட்டில் கல்வி முறை சீரழிந்துவிட்டதை காட்டுகிறது: ராகுல் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ‘‘மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது, நாட்டில் கல்வி முறை சீரழிந்துவிட்டதற்கு இன்னொரு உதாரணம்’’என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ராகுல் காந்தி நேற்று கூறியிருப்பதாவது: தற்போது மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், நாட்டில் கல்வி முறை சீரழிந்துவிட்டது என்பதற்கு இது மற்றொரு உதாரணம்.

பாஜக ஆட்சியில் மாணவர் களின் எதிர்காலத்தை மேம்படுத் துவதற்கு நடவடிக்கை எடுக்க வில்லை. மாறாக, தங்களது எதிர்காலத்துக்காக அரசை எதிர்த்து மாணவர்கள் போராடும் நிலை உள்ளது.

போட்டி தேர்வுகளின் வினாத் தாள்கள் கசிந்துள்ள நிலையில், பிரதமர் மோடி மவுனம் காப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார். நரேந்திர மோடியின் செயலற்ற அரசு, மாணவர்களின் எதிர்காலத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இதில் இருந்து நமது நாட்டை நாம் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்