காஷ்மீரில் 40 ராணுவ நிலைகள் 24 கிராமங்கள் மீது பாக். தாக்குதல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஜம்மு மற்றும் சம்பா மாவட்டங்களில் சர்வதேச எல்லை நெடுகிலும் உள்ள 40 ராணுவ நிலைகள், 24 கிராமங்கள் மீது பாகிஸ்தான் படைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு விடிய விடிய கடும் தாக்குதல் நடத்தின. இதில் 3 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு மாவட்டத்தில் ஆர்னியா, ஆர்.எஸ்.புரா, கனாசாக், அக்னூர் சப்-செக்டார்களிலும் ஜம்மு மாவட்டத்தில் ராம்கார் செக்டாரிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்கு பாகிஸ்தான் சுற்றுக்காவல் படையினர் தாக்குதலை தொடங்கினர்.

இதையடுத்து நமது எல்லை பாதுகாப்பு படையினர் அதே ரக பீரங்கிகள் மற்றும் ஆயுதங்களால் திருப்பித் தாக்கத் தொடங்கினர். திங்கள்கிழமை காலை 7 மணி வரை இரு தரப்பிலும் கடும் மோதல் நீடித்தது.

இதுவரை ஜம்மு மாவட்டத்தில் அத்துமீறலில் ஈடுபட்டுவந்த பாகிஸ் தான் படைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல்முறையாக தங்கள் தாக்குதலை சம்பா மாவட்டத்துக்கு விரிவுபடுத்தியுள்ளனர்.

பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலில் இந்தியத் தரப்பில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை. என்றாலும் ஃப்ளோரா கிராமத்தில் இருவர், கோத்தார் கிராமத்தில் ஒருவர் என 3 அப்பாவி மக்கள் காயமடைந்தனர். இதுதவிர கால்நடைகளும் காயம் அடைந்துள்ளன.

எல்லையில் கடந்த 2 வாரங்களாக பாகிஸ்தான் படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

23 முறை தாக்குதல்:

ஆகஸ்ட் மாதம் துவங்கியது முதல் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 23 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக கடந்த 15 நாட்களில் மட்டும் 21 முறை தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்