சவாலாக வெயில், மழை - 57 தொகுதிகளில் சனிக்கிழமை இறுதிகட்ட வாக்குப்பதிவு 

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலின் இறுதி கட்டமான 7-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை (சனிக்கிழமை ) நடைபெறுகிறது. பிஹார், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், சண்டிகர் ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஒடிசா மாநில சட்டப்பேரவையின் மீதமுள்ள 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறும்.

கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கிய உலகின் மிகப் பெரிய தேர்தல் நடைமுறையில் 6 கட்டங்கள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளன. இதில் 486 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதுவரை நடைபெற்ற 6 கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு சுமுகமாகவும், அமைதியாகவும் நடந்து முடிந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் ஏழுகட்டங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி செவ்வாய்கிழமை நடைபெறும்.

நாளை நடைபெறவுள்ள இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கான இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்குத் தேவையான பிற பொருட்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு வசதியான மற்றும் பாதுகாப்பான சூழலில் நடைபெறுவதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிழல்தரும் பந்தல், குடிநீர், சாய்வுதளம், கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உரியமுறையில் செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் தெற்குப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வடக்குப் பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வீசி வரும் வெப்ப அலைகளால் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல், தென் தமிழகம், கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை வியாழக்கிழமை தொடங்கியது இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமாகவே மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சவாலான தட்ப வெப்ப சூழலுக்கு இடையே மக்களவைத் தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

வெப்பம் அல்லது மழை அதிகம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அதற்கேற்ப ஏற்பாடுகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாநில நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கடந்த 6 கட்ட வாக்குப்பதிவின் போது, வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்கள் அதிக அளவில் வந்து வாக்களித்துள்ளனர். கடந்த இரண்டு கட்ட தேர்தல்களில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர். 7-வது கட்ட தேர்தல் தொடர்பான சில தகவல்கள்:

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

21 mins ago

க்ரைம்

27 mins ago

சினிமா

29 mins ago

தமிழகம்

30 mins ago

க்ரைம்

31 mins ago

இந்தியா

32 mins ago

தமிழகம்

34 mins ago

உலகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்