காங்கிரஸ் உடனான கூட்டணி நிரந்தரமில்லை: கேஜ்ரிவால் உறுதி

By செய்திப்பிரிவு

ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன இண்டியா கூட்டணியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்கிறது.

ஆனால், பஞ்சாப் மாநிலத்தைப் பொருத்தவரையில் காங்கிரஸும் ஆம் ஆத்மியும் எதிரும்புதிருமான கட்சிகள். 2020-ம் ஆண்டு காங்கிரஸை வீழ்த்தி ஆம் ஆத்மி ஆட்சியைக் கைப்பற்றியது.

டெல்லி, கோவா, ஹரியாணா, குஜராத் உள்ளிட்ட இடங்களில் இணைந்து போட்டியிட்ட ஆம் ஆத்மியும் காங்கிரஸும், பஞ்சாப்பில் தனித்து போட்டியிடுகின்றன.

பஞ்சாப்பில் வரும் ஜூன் 1-ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸுடனான கூட்டணி நிரந்தரமானது அல்ல என்றும் பாஜகவின் சர்வாதிகாரத்தை வீழ்த்தவே தற்போது கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்றும் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. ஜூன் 2-ம் தேதி அவர் மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE