கூட்ட நெரிசலால் பேரணியில் இருந்து பாதியில் வெளியேறிய ராகுல், அகிலேஷ்

By செய்திப்பிரிவு

பாடிலா: மக்களவை தேர்தலை முன்னிட்டு இண்டியா கூட்டணி சார்பில், உ.பி.யின் புல்பூர் தொகுதிக்கு உட்பட்ட பாடிலாவில் நேற்று பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமான தொண்டர்கள் கூடியதையடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸாரும், பாதுகாப்பு படையினரும் திணறினர். இதையடுத்து, தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்குமாறு தலைவர்களின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதனை பொருட்படுத்தாமல் தடுப்புகளை உடைத்துக் கொண்டு மேடையை நோக்கி தொண்டர்கள் முன்னேற முயன்றனர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கருதி ராகுல் மற்றும் அகிலேஷ் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினர்.

இதேபோன்ற சூழ்நிலைதான் அலகாபாத் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பிரயாக்ராஜ் மாவட்டம் கரச்சானாவில் உள்ள முங்காரி பொதுக்கூட்ட பேரணியிலும் காணப்பட்டது. அங்கேயும் தடுப்புகளை உடைத்துக் கொண்டு தலைவர்கள் அமர்ந்திருந்த மேடையை நோக்கி தொண்டர்கள் முன்னேற முயன்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

க்ரைம்

6 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்