மோடி இன்று வேட்பு மனு தாக்கல் - வாராணசி செல்கிறார் சந்திரபாபு

By செய்திப்பிரிவு

வாராணசியில் இன்று பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக பாஜகவின் தோழமை கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையொட்டி, இன்று காலை விஜயவாடாவில் இருந்து தனி விமானம் மூலம் வாராணசி செல்கிறார் சந்திரபாபு நாயுடு.

அங்கு, பிரதமர் மோடியை சந்தித்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் மோடிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளார். பின்னர் மதியம் அதே விமானத்தில் அவர் விஜயவாடா திரும்புகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE