மும்பையில் உள்ள சிபிஎஸ்இ பள்ளி சோமையா வித்யாவிஹார். இதில், முதல்வராக பணியாற்றி வந்தவர் பர்வீன் ஷேக். இவர் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வந்த ட்விட்டர் பதிவை லைக் செய்திருந்தார்.
இந்த விவகாரம் சர்ச்சையானதையடுத்து பள்ளி நிர்வாகம் அவரை நேற்றுமுன்தினம் தாமாக முன்வந்து பணிநீக்கம் செய்தது.