என் வாழ்க்கையில் கடைசி தேர்தல்: திக் விஜய சிங் உருக்கம்

By செய்திப்பிரிவு

போபால்: மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திக்விஜய சிங் நேற்று உருக்கமுடன் கூறியதாவது: என் தந்தையின் மரணத்துக்குப் பிறகு கஸ்தூர்சந்த் கத்தாரி என்னை சந்தித்தார். அப்போது அவர் குடும்பத்தை காப்பாற்றும் அளவுக்கு பணத்தை ஈட்டு, பிறகு தனக்கென ஒரு நற்பெயரை உருவாக்கு என்ற அறிவுரையை வழங்கியிருந்தார். ஆனால், அதில் நான் எவ்வளவு வெற்றி பெற்றுள்ளேன் என்பதை என்னால் தீர்மானிக்க முடியாது.

2024 பொதுத் தேர்தல்தான் 77 வயதான எனக்கு வாழ்நாளின் கடைசி தேர்தலாக இருக்கும். 50 ஆண்டு கால எனது அரசியல் வாழ்க்கையில் இந்த தேர்தலில் மக்கள் கொடுக்கும் வெற்றியின் மூலம்தான் அதனை தீர்மானிக்க முடியும். இவ்வாறு திக்விஜய சிங் தெரிவித்தார்.

ராகோகர் (குவாலியர் மாநிலத்தின் கீழ்) ராஜாவான பல்பத்ரா சிங்கின் மகன்தான் திக்விஜய சிங். கடந்த 1969-ல்ரகோர் நகராட்சி மன்ற தலைவராக தேர்வானபோது அவரது அரசியல் பயணம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE