விசாகப்பட்டினம்: கடந்த 1996-ம் ஆண்டு ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், வெங்கடய்ய பாளையத்தில் 5 தலித்துகள் அவமானப்படுத்தப்பட்டனர்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மேலவை உறுப்பினரும், தற்போதைய மண்டபேட்டா தொகுதியின் ஜெகன் கட்சியின் வேட்பாளருமான தோட்டா திருமூர்த்திலு உட்பட மொத்தம் 6 பேர் மீது தலித் வன்கொடுமை பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு கடந்த 28 ஆண்டுகளாக விசாகப்பட்டினம் நீதிமன்றத்தில் நடபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
5 தலித்துகள் மீது நடந்த தாக்குதல் சம்பவம் உண்மைதான் என்றும், தோட்டா திருமூர்த்திலு உட்பட மொத்தம் 6 பேரும் குற்றவாளிகள் என்றும், இவர்களுக்கு 18 மாதங்கள் சிறை தண்டனையும், ரூ.2.5 லட்சம் அபராதமும் விதிப்பதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனை தலித் கூட்டமைப்பினர் ஆந்திராவில் விசாகப்பட்டினம், மேற்கு கோதாவரி மாவட்டங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago