காஷ்மீர் என்கவுன்ட்டரில் தீவிரவாதி உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்:தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டம், ராஜ்போரா பகுதியில் உள்ள ப்ரெஸ்ஸிபோரா என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியை பாதுகாப்பு படையினர் நேற்று சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் – தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். இவர் ஸ்ரீநகரை சேர்ந்த தானிஷ் ஷேக் எனவும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் ‘தி ரெசிஸ்டன்ட் ஃப்ரன்ட்’ பிரிவைச் சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டார்.

சம்பவ இடத்திலிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஜனவரி 5-ம் தேதி நடந்த என்கவுன்ட்டரில் லஷ்கர் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். அதன் பிறகு 3 மாதங்களுக்குப் பிறகு நேற்று தீவிரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

மேலும்