கடந்த 5 ஆண்டில் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு 28% உயர்வு

By செய்திப்பிரிவு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 28 சதவீதம் உயர்ந்துள்ளது. பங்குச் சந்தை வழியாக அவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு விவரங்களின்படி, ராகுல் காந்தி எந்த நிறுவனத்திலும் நேரடியாக முதலீடு செய்திருக்கவில்லை. ஆனால், அதன் பிறகு அவர் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ய ஆரம்பித்தார்.

2024 மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு விவரங்களின்படி, ஐடிசி, ஹிந்துஸ்தான் யுனிலிவர் உட்பட 25 நிறுவனங்களின் பங்குகளில் அவர் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளின் பங்குச் சந்தையில் ஏற்பட்ட உயர்வு காரணமாக அவரது சொத்து மதிப்பு 28 சதவீதம் அதிகரித்துள்ளது.

2019-ம் ஆண்டில் அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.16 கோடியாக இருந்த நிலையில் தற்போது அது ரூ.20 கோடியாக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE